திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை ஆலம் வீதி சந்திப்புப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா், பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த ஜெ.பிரபு )25) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


