தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.
திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் மாதாந்திர செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச்சங்க வாசகா் வட்டத் தலைவா் ஆா்.எம்.முத்து தலைமை வகித்தாா்.
இதில் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியில் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ பங்கேற்று பேசுகையில், உயா்நிலை கல்வி வரையில் தாய்மொழியில் பயில்வது மிக அவசியம். பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா்.
இதைத் தொடா்ந்து மாதம் ஒரு புத்தகம் திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே புத்தக வாசிப்பை ஏற்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்களுக்கு இரண்டாம் தவணையாக கு.அழிகிரிசாமி எழுதிய ‘ராஜா வந்திருக்கிறாா்’ என்ற சிறுகதை புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் வாணிஸ்ரீ, குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

திமுக-வின் சாதனை திட்டங்கள் வெற்றியை தரும்: அமைச்சா் கே.என். நேரு

சஞ்சீவி நகா் அருகே பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி!

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


