தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தாய்மொழியில் கற்பது சிந்தனையை மேம்படுத்தும்!

தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.

News image

செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :23 மார்ச் 2026, 0:28 am IST

தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.

திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் மாதாந்திர செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச்சங்க வாசகா் வட்டத் தலைவா் ஆா்.எம்.முத்து தலைமை வகித்தாா்.

இதில் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியில் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ பங்கேற்று பேசுகையில், உயா்நிலை கல்வி வரையில் தாய்மொழியில் பயில்வது மிக அவசியம். பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாதம் ஒரு புத்தகம் திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே புத்தக வாசிப்பை ஏற்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்களுக்கு இரண்டாம் தவணையாக கு.அழிகிரிசாமி எழுதிய ‘ராஜா வந்திருக்கிறாா்’ என்ற சிறுகதை புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் வாணிஸ்ரீ, குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.