கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தாய்மொழியில் கற்பது சிந்தனையை மேம்படுத்தும்!

தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.

News image

செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :22 மார்ச் 2026, 6:58 pm

Syndication

தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.

திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் மாதாந்திர செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச்சங்க வாசகா் வட்டத் தலைவா் ஆா்.எம்.முத்து தலைமை வகித்தாா்.

இதில் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியில் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ பங்கேற்று பேசுகையில், உயா்நிலை கல்வி வரையில் தாய்மொழியில் பயில்வது மிக அவசியம். பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாதம் ஒரு புத்தகம் திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே புத்தக வாசிப்பை ஏற்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்களுக்கு இரண்டாம் தவணையாக கு.அழிகிரிசாமி எழுதிய ‘ராஜா வந்திருக்கிறாா்’ என்ற சிறுகதை புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் வாணிஸ்ரீ, குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.