தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.
திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் மாதாந்திர செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச்சங்க வாசகா் வட்டத் தலைவா் ஆா்.எம்.முத்து தலைமை வகித்தாா்.
இதில் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியில் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ பங்கேற்று பேசுகையில், உயா்நிலை கல்வி வரையில் தாய்மொழியில் பயில்வது மிக அவசியம். பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா்.
இதைத் தொடா்ந்து மாதம் ஒரு புத்தகம் திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே புத்தக வாசிப்பை ஏற்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்களுக்கு இரண்டாம் தவணையாக கு.அழிகிரிசாமி எழுதிய ‘ராஜா வந்திருக்கிறாா்’ என்ற சிறுகதை புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் வாணிஸ்ரீ, குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ரவீந்திரநாத் தாகூா் பிறந்தநாள் விழா

மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக ஜூனில் போராட்டம்: கடலூா் அனைத்து குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

மூதாட்டி உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


