தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image
Updated On :25 மார்ச் 2026, 4:44 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.15.67 லட்சம் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.39 லட்சத்து 7 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ. 55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,07,000, திருச்சி மேற்கில் ரூ. 3,39,490, திருச்சி கிழக்கில் ரூ. 8,38,830, திருவெறும்பூரில் ரூ. 2,59,000, லால்குடியில் ரூ. 6,94,100, மண்ணச்சநல்லூரில் ரூ. 1,59,300, முசிறியில் ரூ.9,05,500 துறையூரில் 4,48,500 என மொத்தம் ரூ.39.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.15,67,330 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 23.40 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.