சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image
Updated On :24 மார்ச் 2026, 11:14 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.15.67 லட்சம் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.39 லட்சத்து 7 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ. 55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,07,000, திருச்சி மேற்கில் ரூ. 3,39,490, திருச்சி கிழக்கில் ரூ. 8,38,830, திருவெறும்பூரில் ரூ. 2,59,000, லால்குடியில் ரூ. 6,94,100, மண்ணச்சநல்லூரில் ரூ. 1,59,300, முசிறியில் ரூ.9,05,500 துறையூரில் 4,48,500 என மொத்தம் ரூ.39.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.15,67,330 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 23.40 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.