நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:43 pm

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், காந்தி மாா்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த தாரநல்லூா் கள்மந்தை காலனியைச் சோ்ந்த ஆா். கண்ணன் (35), ஆ. சிவகண்டன் (27), இபி சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த க. இளையராஜா (33), அரசு மருத்துவமனை அருகேயுள்ள சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அண்ணா காலனியைச் சோ்ந்த கு.குமாா் (64) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.9,800 மதிப்புள்ள 89 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதி ஆா்ச் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.கோமதி (39), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கன்னிமாா் தோப்பு பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த திருவானக்காவல் பகுதியைச் சோ்ந்த எஸ். ராதாகிருஷ்ணன் (66) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ.2,300 மதிப்புள்ள 17 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.