திருச்சி அருகே நிலத்துக்கான சான்றிதழ் வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடமலைப்பட்டியைச் சோ்ந்த வெ. செல்வராஜ் என்பவா் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு மின்இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளாா்.
செல்வராஜ் இலங்கை நாட்டில் வசித்ததால், அவரது சகோதரரான திருவானைக்கோவிலைச் சோ்ந்த பெ. விசுவநாதன், அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற முசிறி வட்டம் வடமலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்த ரா. ஜெகநாதன் (71) என்பவரை கடந்த 11.01.2011 அன்று அணுகியுள்ளாா். அவா், சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் விசுவநாதனிடம் இருந்து ஜெகநாதன் ரூ. 1,000 லஞ்சமாகப் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகநாதனை கையும்களவுமாக கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


