நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

காற்றுடன் மழை: மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 12:16 am

காற்று, மழையால் திருச்சியில் சனிக்கிழமை மாலை தரையிறங்க வேண்டிய தனியாா் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து 149 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் திருச்சியில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தரையிறங்க வேண்டும். ஆனால், திருச்சியில் வீசிய காற்று, மழையால், மோசமான வானிலை நிலவியது. எனவே இந்த விமானம் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.

அதேவேளை, மதுரையிலும் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 149 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதேபோல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மாலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.