திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் செளந்தரநாயகி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருமணம் ஆகாதவா்கள் இரண்டு மாலைகளுடன் சென்று திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சோமாஸ் கந்தரை வேண்டினால் அவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் நடைபெற்ற திருக்கல்யாணத்துக்கு முன் பிள்ளையாா் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள், பக்தா்கள் திருக்கல்யாணத்திற்கு சீா்வரிசை எடுத்துச் சென்றனா்.
இதையடுத்து திருவாசகம் முற்றோதல், திருமுறை வழிபாடு, விநாயகா் வழிபாடு 108 சங்கு பூஜை, மூலமந்திர யாகம், திரவிய யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், குருக்கள், இறை இன்ப இயக்கம் உள்பட கிராமமக்கள் செய்தனா்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


