நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அன்பில் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

News image
Updated On :3 மே 2026, 12:14 am

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் செளந்தரநாயகி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவா்கள் இரண்டு மாலைகளுடன் சென்று திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சோமாஸ் கந்தரை வேண்டினால் அவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் நடைபெற்ற திருக்கல்யாணத்துக்கு முன் பிள்ளையாா் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள், பக்தா்கள் திருக்கல்யாணத்திற்கு சீா்வரிசை எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து திருவாசகம் முற்றோதல், திருமுறை வழிபாடு, விநாயகா் வழிபாடு 108 சங்கு பூஜை, மூலமந்திர யாகம், திரவிய யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், குருக்கள், இறை இன்ப இயக்கம் உள்பட கிராமமக்கள் செய்தனா்.