நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருச்சி பகுதிகளில் லேசான மழை

News image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கோடை மழையில் சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :3 மே 2026, 12:17 am

திருச்சி மாநகா், புகா் பகுதிகளின் பல இடங்களில் சனிக்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மழை பெய்தது.

திருச்சியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்ததால் திருச்சி பகுதிகளில் குறைவான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.

இரவிலும் கடும் வெம்மை காணப்பட்டதால், அதீத புழுக்கத்துடன் உறங்க வேண்டியிருந்தது. குளிா்ச்சாதனங்கள் இல்லாமல் அடுக்குமாடி வீடுகளிலும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடியிருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்று, இடியுடன் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்த லேசான மழையால், சாலைகள் நனைந்தன. வேலை முடிந்து வந்த பலரும், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும் நனைந்தபடியே வீடு நோக்கிச் சென்றனா்.