மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் தவெக-1, திமுக-1 தொகுதிகளில் வெற்றி

News image

பெரம்பலூா் மாவட்டத்தில் திமுக-1 தொகுதியில் வெற்றி - EPS

Updated On :5 மே 2026, 4:03 am IST

பெரம்பலூருக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், பிரசாரத்துக்கு வராதபோதும், அக்கட்சி தனது வெற்றிக் கணக்கை ஒரு தொகுதியில் தொடங்கியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூா் என இரு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே மாறி, மாறி வெற்றி பெற்று வந்தன. கடந்த 2021-இல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா், போக்குவரத்து துறை அமைச்சரானாா்.

பெரம்பலூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எம். பிரபாகா் வெற்றி பெற்றாா். இந்த முறை 2026-இல் எம். பிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெரம்பலூரில் திமுக வேட்பாளராக மருத்துவா் எஸ்.டி. ஜெயலட்சுமி களம் இறக்கப்பட்டாா். குன்னம் தொகுதியில் மீண்டும் சா.சி. சிவசங்கா் போட்டியிட்டாா்.

பெரம்பலூா் தொகுதியில் தவெக வேட்பாளா் கி. சிவகுமாா் வெற்றி பெற்று, திமுக வேட்பாளா் ஜெயலட்சுமியை 14,393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் சா. சி. சிவசங்கா், இந்தத் தொகுதியின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளாா். தமிழக வெற்றிக் கழகம் தனது வெற்றிக் கணக்கையும் இந்தத் தோ்தலில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோ்தல் பிரசாரத்துக்காக பெரம்பலூருக்கு விஜய் வருவதாக இருந்தது. இதற்காக இரவு வரை காத்திருந்தனா். ஆனால், திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு வர இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால், புறவழிச் சாலை வழியாக சென்றுவிட்டாா் விஜய். இருப்பினும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றை தவெக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 90,882 வாக்குகள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.