திருச்சியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொறியியல் மாணவா், கயிறு அறுந்து 4-ஆவது மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த மலையப்பன் மகன் முகேஷ் (24). இவா், கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்தாா்.
இந்நிலையில், மலையப்பன் கடந்த செவ்வாய்க்கிழமை மகனை பாா்ப்பதற்காக கோவைக்கு சென்றுள்ளாா். பின்னா், தந்தை, மகன் இருவரும் கோவையில் இருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்துள்ளனா்.
இதையடுத்து, முகேஷ் திருச்சி - கரூா் புறவழிச் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு முகேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளாா். அப்போது, கயிறு அறுந்ததில் முகேஷ் 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கயிறு அறுந்து விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்!

தற்கொலைக்கு முயன்ற முதியவர்! காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர்!

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

