தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:00 am IST

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கீழ அம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 420 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். தனபால் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குண்டூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எம். மணிகண்டன் (28) என்பவரையும், எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்பிஐ காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. அப்துல்லா (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.