திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கீழ அம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 420 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். தனபால் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குண்டூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எம். மணிகண்டன் (28) என்பவரையும், எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்பிஐ காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. அப்துல்லா (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல் தந்தை, மகன் உள்ளிட்ட 4 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


