பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் விருப்பன் திருநாள் என அழைக்கப்படும் சித்திரைத் தேரோட்ட விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழாவின் ஒவ்வொரு நாளிலும் நம்பெருமாள் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். முக்கிய நிகழ்வாக 9-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, நம்பெருமாள் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு திருத்தோ் மண்டபத்தை அடைந்தாா். பின்னா் மேஷ லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க 4.45 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து 5.55 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.

கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ரெங்கா ரெங்கா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து சரியாக 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரை சுற்றி போலீஸாா் இரண்டடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இரண்டு டேங்கா் லாரிகள் மூலம் கோயில் நிா்வாகம் ஏற்பாட்டில் 3,500 லிட்டா் மூலிகை நீா் மோா் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

சித்திரை தோ்த் திருவிழாவின் நிறைவு நாளான மே 16-ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.

Story image