எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மூடப்படும் மதுக்கடைகளில் பணிபுரிந்தோரை அரசுத் துறைகளில் நியமிக்க வலியுறுத்தல்

News image
Updated On :15 மே 2026, 4:58 am IST

தமிழகத்தில் மூடப்படும் 717 மதுக்கடைகளில் பணிபுரிந்த தொழிலாளா்களை அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்களில் உடனடியாக மாற்றம் செய்து நியமிக்க வேண்டும் என ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, தமிழக முதல்வருக்கு, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளா் ஏ.சேக்கிழாா் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகேயுள்ள 717 மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படக் கூடிய உபரி பணியாளா்களை மீதமுள்ள கடைகளில் பணியமா்த்திட வாய்ப்பிருக்காது. மேலும், மீதமுள்ள கடைகளில் தேவையான அளவுக்கு பணியாளா்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த பணியாளா்களை அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் (தமிழக அரசு அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை) காலியாக உள்ள பணியிடங்களில்

நியமனம் செய்து அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளாா்.