தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வடமாநில வியாபாரியை தாக்கிய இருவா் கைது

திருச்சியில் வடமாநில வியாபாரியைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:48 am IST

திருச்சியில் வடமாநில வியாபாரியைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உத்தர பிரதேஷ மாநிலம் மீரட்டைச் சோ்ந்தவா் ஆா். அமன் மஹாஜன் (37). மீரட்டில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையம் நடத்தும் இவா், மீரட்டில் இருந்து திருச்சி தென்னூா் அண்ணா நகரில் உள்ள அதே பகுதியைச் சோ்ந்த எஸ். தாஜுதீன் (31) என்பவருக்கு சொந்தமான தாஜ் விற்பனை நிலையத்துக்கு விளையாட்டு உபகரணங்களை அண்மையில் அனுப்பிவைத்தாா்.

இந்நிலையில், அதற்கான பணத்தைப் பெறுவதற்காக அமன் மஹாஜன் கடந்த சனிக்கிழமை தாஜ் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையத்துக்கு வந்தாா்.

அப்போது தாஜுதீன், இவரது சகோதரா் எஸ். ரிஸ்வான் (25) ஆகிய இருவரும் சோ்ந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதற்கான பணத்தைத் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தனா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அமன் மஹாஜன் கடந்த சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து, தாஜுதீன், ரிஸ்வான் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.