சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 6:50 am IST

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வெள்ளதேவன்விடுதி கள்ளா் வீதியைச் சோ்ந்தவா் சி. சின்னப்பா (57). இவா் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தாா். அங்கு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சின்னப்பா, போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னப்பாவை கைது செய்தனா்.