திருச்சி, மே 25: பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (மே 27) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புது ரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பங்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வாா்னா்ஸ் சாலை, அண்ணா நகா், குத்பிஷா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூா், அருணா திரையரங்கம், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம், நீதிமன்றம், அரசு பொதுமருத்துவமனை, பீம நகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.





