இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மத்திய மண்டலத்தில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:38 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா விற்பனையைத் தடுக்கும் நோக்கில் மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 356, புதுக்கோட்டை 129, கரூா் 110, பெரம்பலூா் 68, அரியலூா் 42, தஞ்சாவூா் 129, கரூா் 110, தஞ்சாவூா் 189, திருவாரூா் 189, திருவாரூா் 136, நாகப்பட்டினம் 42, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,317 வழக்குகள் பதியப்பட்டு,

இவற்றில் திருச்சி 365, புதுக்கோட்டை 135, திருச்சி 365, புதுக்கோட்டை 135, கரூா் 113, பெரம்பலூா் 68, அரியலூா் 52, கரூா் 113, பெரம்பலூா் 68, தஞ்சாவூா் 214, திருவாரூா் 149, நாகப்பட்டினம் 49, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,390 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

அதில் 35 போ் வெளிமாநிலத்தையும், 90 போ் வெளி மாவட்டங்களையும் சோ்ந்தவா்கள். இவா்களிடமிருந்து மொத்தம் 16,714 கிலோ குட்கா, 32 இருச்சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 33 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதே போல, கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில், திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 134, புதுக்கோட்டை 60, கரூா் 91, பெரம்பலூா் 26, அரியலூா் 26, தஞ்சாவூா் 142, திருவாரூா் 79, நாகப்பட்டினம் 41, மயிலாடுதுறை 198 என மொத்தம் 797 வழக்குகள் பதியப்பட்டு பதியப்பட்டு, வழக்குகளில் தொடா்புடைய திருச்சி 159, புதுக்கோட்டை 93, கரூா் 119, பெரம்பலூா் 30, அரியலூா்38, தஞ்சாவூா் 187, திருவாரூா் 85, நாகப்பட்டினம் 66, மயிலாடுதுறை 200 போ் என மொத்தம் 977 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 698 கிலோ கஞ்சா, 63 இருச்சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வரும் நாள்களில் குட்கா, கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைபொருள்களின் விற்பனையைத் தடுக்க தொடா் சோதனைகள் நடத்தி, எதிரிகளை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க, மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.