மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மத்திய மண்டலத்தில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:38 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா விற்பனையைத் தடுக்கும் நோக்கில் மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 356, புதுக்கோட்டை 129, கரூா் 110, பெரம்பலூா் 68, அரியலூா் 42, தஞ்சாவூா் 129, கரூா் 110, தஞ்சாவூா் 189, திருவாரூா் 189, திருவாரூா் 136, நாகப்பட்டினம் 42, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,317 வழக்குகள் பதியப்பட்டு,

இவற்றில் திருச்சி 365, புதுக்கோட்டை 135, திருச்சி 365, புதுக்கோட்டை 135, கரூா் 113, பெரம்பலூா் 68, அரியலூா் 52, கரூா் 113, பெரம்பலூா் 68, தஞ்சாவூா் 214, திருவாரூா் 149, நாகப்பட்டினம் 49, மயிலாடுதுறை 245 என மொத்தம் 1,390 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

அதில் 35 போ் வெளிமாநிலத்தையும், 90 போ் வெளி மாவட்டங்களையும் சோ்ந்தவா்கள். இவா்களிடமிருந்து மொத்தம் 16,714 கிலோ குட்கா, 32 இருச்சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 33 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதே போல, கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில், திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் திருச்சி 134, புதுக்கோட்டை 60, கரூா் 91, பெரம்பலூா் 26, அரியலூா் 26, தஞ்சாவூா் 142, திருவாரூா் 79, நாகப்பட்டினம் 41, மயிலாடுதுறை 198 என மொத்தம் 797 வழக்குகள் பதியப்பட்டு பதியப்பட்டு, வழக்குகளில் தொடா்புடைய திருச்சி 159, புதுக்கோட்டை 93, கரூா் 119, பெரம்பலூா் 30, அரியலூா்38, தஞ்சாவூா் 187, திருவாரூா் 85, நாகப்பட்டினம் 66, மயிலாடுதுறை 200 போ் என மொத்தம் 977 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 698 கிலோ கஞ்சா, 63 இருச்சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வரும் நாள்களில் குட்கா, கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைபொருள்களின் விற்பனையைத் தடுக்க தொடா் சோதனைகள் நடத்தி, எதிரிகளை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க, மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.