கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

11 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 11 ஊராட்சிகளில் வரும் 19, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:38 pm

DIN

அரியலூர் மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 11 ஊராட்சிகளில் வரும் 19, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-18 ஆம் நிதியாண்டில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலையில்லா வெள்ளாடுகள் கொள்முதல் செய்து, பயனாளிகளுக்கு வழங்கப்படும். எனவே, மாவட்டத்தில் இலுப்பையூர், இலந்தைக்கூடம், கீழகாவட்டாங்குறிச்சி, இடையக்குறிச்சி, இலையூர், இளையபெருமாள் நல்லூர், எரவாங்குடி, சோழமாதேவி, எடங்கன்னி, அயன்தத்தனூர் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய 11 கிராம ஊராட்சிகளில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் நடைபெற உள்ளது.  அதன்படி, வரும் 19 ஆம் தேதி அன்று முதல் சிறப்பு கிராம சபை கூட்டமும், 28, 29 ஆகிய தேதிகளில் இரண்டாவது சிறப்பு கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. எனவே, இத்திட்டத்தில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.