அரியலூர் மாவட்டம் ஆட்சியரக அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, அரியலூர் மாவட்டத்துக்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் 9 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக மானியத்தொகையும், மேலும் 3 டிராக்டர், 1 மினி டிராக்டர், 5 சுழற்கழப்பை, 13 பவர் டில்லர் என 22 வேளாண் இயந்திரங்கள் என ரூ. 52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ.ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி, வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் அலுவலர் வடிவேல் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

