முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை தேவை

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை

Updated On :25 டிசம்பர் 2018, 9:33 am IST

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என கீழப்பழுவூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரனிடம்  அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது:
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, கீழப்பழுவூர் பகுதியிலும் சுமார் 80 பேரிடம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது.  எனவே, அரசு வழங்கவுள்ள மதிப்பீட்டுத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி கிராம மக்கள் அளித்த மனு:  எங்கள் கிராமத்தில் 165 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.