திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என கீழப்பழுவூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரனிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது:
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, கீழப்பழுவூர் பகுதியிலும் சுமார் 80 பேரிடம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது. எனவே, அரசு வழங்கவுள்ள மதிப்பீட்டுத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் 165 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


