ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

ஓய்வுபெற்ற  அலுவலர்கள்  சங்கக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:51 am IST

அரியலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை குடும்ப ஓய்வூதியர்களுக்கும் நீடிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையைப் பாகுபாடின்றி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு முழு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புலவர் சி.இளங்கோ வரவேற்றார். சி.திருநாவுக்கரசு நன்றி தெரிவித்தார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.