இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7 ஆவது ஊதியக் குழுவில் வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இரா.அய்யாசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலர் தேவேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
