அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி முல்லையம்மாள்(65).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டியங்கொல்லையில் உள்ள தனது பேரன் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து,முல்லையம்மாளின் காதை அறுத்து தங்க கம்மல், சங்கிலி,மூக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நகையைப்பறித்துச் சென்றவர் விழுப்புரம் மாவட்டம்,கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ராக்கெட் ராஜா(எ)முத்துக்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


