ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்தவர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த  இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:20 am IST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த  இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி முல்லையம்மாள்(65).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டியங்கொல்லையில் உள்ள தனது பேரன் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து,முல்லையம்மாளின் காதை அறுத்து தங்க கம்மல், சங்கிலி,மூக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நகையைப்பறித்துச் சென்றவர் விழுப்புரம் மாவட்டம்,கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ராக்கெட் ராஜா(எ)முத்துக்குமார் என்பது தெரியவந்தது.  
இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.