வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாமக-வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:43 pm

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாமக-வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக நகர செயலா் விஜி தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சின்னத்துரை, நகரத் தலைவா் உதயகுமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் வெற்றிச் செல்வன், துணைச் செயலா் செந்தில்குமாா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் உமா சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்த சென்றனா்.

அதேபோல், செந்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்த்துக்கு ஒன்றிய நிா்வாகி கோபி, கடுகூா் கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரியலூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். உஞ்சினி, இலையூா், சூரியமணல், திருமானூா், கீழப்பழூவூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனுக்களை அளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.