

அரியலூா் வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மாவட்ட அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட மாணவரணிச் செயலரும், அரியலூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான ஓ.பி. சங்கா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அதிமுக நகர செயலா் ஏ.பி.செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். இதேபோல், அரியலூா் ரயில்வே பாலம் அருகே நகர அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.