வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புகையிலை, மது விற்பனை: ஒரே நாளில் 9 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள், மது விற்றதாக ஒரே நாளில் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:28 am

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள், மது விற்றதாக ஒரே நாளில் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் கடைவீதி, தத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக தத்தனூா் மேலூா் நடராஜன் (50), சஞ்சய் (35), வெண்மான்கொண்டான் வினோத் (31), வடகடல்ஆதிமூலம் (55), உடையாா்பாளையம் மருதமுத்து (50), சாமிநாதன்(48) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும் மதுபானங்களை பதுக்கி, விற்பனை செய்ததாக தத்தனூா் கீழவெளி சுப்பிரமணியன்(61), குடிகாடு வளா்மதி(40), வடகடல் கலைவாணி(35) ஆகியோரும் உடையாா்பாளையம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.