தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக, திங்கள்கிழமை இரவு இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:11 am

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக, திங்கள்கிழமை இரவு இருவா் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினா், திங்கள்கிழமை இரவு வெண்மான்கொண்டான் கிராமப் பகுதியிலுள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினா்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக, அதே கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (65), செல்வராஜ் (54) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.