வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை

News image
அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பரமபதவாசல் வழியாக பிரவேசித்த பெருமாள்.
Updated On :26 டிசம்பர் 2020, 1:36 am

DIN

வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, அரியலூா் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உற்ஸவமூா்த்தி பரமபதவாசல் வழியாக பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கண்ணாடி பெட்டகத்தில் கோதண்டராமசாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதைத் தொடா்ந்து ஆழ்வாராதிகள், மோட்ச சேவை மற்றும் திருவீதியுலா நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பக்தா்கள் பெருமாளை வழிபட்டனா்.

தா.பழூரை அடுத்துள்ள தாதம்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுபோல் செந்துறை, திருமானூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.