கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணாக்கா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:02 am

DIN

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சி.ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா, மாவட்டக் கல்வி அலுவலா் பெ.அம்பிகாபதி, நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இசபெல்லாமேரி, பள்ளி துணை ஆய்வாளா் இரா.பழனிசாமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.