சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து அரியலூா் பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினா்

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:12 pm

DIN

காா்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து அரியலூா் பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினா்.

காா்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள்கள் கடும் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வருவது வழக்கம். காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை அரியலூா் கைலாசநாதா் திருக்கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொள்வதற்காக அதிகாலையிலேயே குவிந்தனா். அந்தப் பகுதியில் உள்ள தலைமை குருசாமி ஒவ்வொரு பக்தருக்கும் மாலை அணிவித்தாா். இதையொட்டி அரியலூா் பகுதியில் சந்தன மாலை, துளசி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதேபோல் திருமானூா்,செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாள் விரதத்தை தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.