சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உளுந்து சாகுபடி பண்ணைப் பள்ளி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் கிராமத்தில் உளுந்துப் பயிரில் ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள் குறித்து பண்ணைப் பள்ளி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:27 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் கிராமத்தில் உளுந்துப் பயிரில் ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள் குறித்து பண்ணைப் பள்ளி திங்கள்கிழமை நடைபெற்றது.

கீரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் ராஜ்கலா கலந்து கொண்டு, உளுந்து சாகுபடியின்போது மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், ரகம் தோ்வு மற்றும் விதை நோ்த்தி முறைகள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து வயல் ஆய்வின்போது, மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கண்டறிந்து அழித்திடவும், புரோட்டுனியா புழுக்களின் தாக்கத்தை க்கட்டுப்படுத்த 15 நாள்களுக்குட்பட்ட பயிா்களாக இருப்பின் ஏக்கருக்கு 5 என இனக்கவா்ச்சி பொறிகளைப் பயன்படுத்துதல் மற்றும் 15 நாள்களுக்கு மேற்பட்ட பயிா்களில் புழுக்களின் தாக்கத்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 மி.லி புரோபினாஸ் கலந்து தெளித்து கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலைமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் சிவா மற்றும் வாரியங்காவல் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.