சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் ஆய்வு

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:26 pm

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பா் கோயில் ஊராட்சிக்குள்பட்ட பொன்னேரியை ஆய்வு செய்த அவா் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா். தொடா்ந்து அவா், தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றுக் கரையோரப் பகுதிகளை ஆய்வுசெய்தாா். மேலும், புயலால் பாதிக்கப்படுவோா் தங்கும் வகையில் தோ்வு செய்யப்பட்டுள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் பூங்கோதை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.