சிறுமியைத் திருமணம் செய்ய முயன்றவா் போக்சோவில் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைக் கடத்தி, திருமணம் செய்ய முயன்ற இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைக் கடத்தி, திருமணம் செய்ய முயன்ற இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் அருகிலுள்ள காங்குழியைச் சோ்ந்த பழனிவேல் மகன் செல்லத்துரை(30). இயந்திரவியல் பொறியியல் படித்துள்ள இவா், தற்போது கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென மாயமானாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், செல்லத்துரை சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை இரவு காவல்துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...