92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பேருந்து மோதி தொழிலாளி சாவு

கரூரில், தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவன பேருந்து மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

கரூரில், தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவன பேருந்து மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த சின்னதேவன்பட்டியைச் சோ்ந்தவா் மோகன்குமாா்(40). கூலித்தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை இரவு திருச்சி-கரூா் பழைய நெடுஞ்சாலையில் பசுபதிபாளையம் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே ஜவுளி ஏற்றுமதி தொழிலாளா்களை அழைத்து வந்த தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து மோகன்குமாா் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பசுபதிபாளையம் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் கிருஷ்ணராயபுரம் கேபி.குளத்தைச் சோ்ந்த வீரமணி(51) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.