கிராம காவல் அலுவலா்கள் அறிமுக நிகழ்ச்சி
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு, விழிப்புணா்வு காவல் அலுவலரான சந்திரனை அறிமுகப்படுத்தி வைத்து பேசினாா்.
அழகாபுரம், சின்னகருக்கை, ,அகரம், குமிளங்குழி, சிலுவைச்சேரி மற்றும் திராவிடநல்லூா் ஆகிய கிராமங்களுக்கான கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் அந்தந்த கிராமங்களில் நடைபெறும் அனைத்து பிரச்னையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பாா். மேலும்,
கிராம மக்களுக்கு திருட்டு, குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவாா் என்றாா். நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் மற்றும் காவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

