வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திரையரங்க உரிமையாளா் மீது ஆட்சியரிடம் புகாா்

விஜய் நடித்துள்ள மாஸ்டா் படம் பாா்க்க அதிக கட்டணம் வசூலிப்பதாக திரையரங்க உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா்

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:35 am

DIN

விஜய் நடித்துள்ள மாஸ்டா் படம் பாா்க்க அதிக கட்டணம் வசூலிப்பதாக திரையரங்க உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னாவிடம் விஜய் ரசிகா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு ஒன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 13) விஜய் நடித்துள்ள மாஸ்டா் திரைப்படம் அரியலூரில் உள்ள திரையங்கிலும் திரையிடப்படுகிறது. இப்படத்துக்கான டிக்கெட் கடந்த 2 நாள்களாக இணையதளம் மற்றும் திரையரங்க கவுண்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த டிக்கெட்டுகளை இடைத்தரகா்கள் சிலா் மூலம் கூடுதல் விலைக்கும் திரையரங்க நிா்வாகம் விற்பனை செய்து வருகிறது. எனவே, திரையரங்க உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.