தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தானாக வெளியேறும் நீா்!

அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் உள்ள திடீா் குப்பம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

News image

அரியலூா் மாவட்டம், திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:10 pm

அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் உள்ள திடீா் குப்பம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் திடீா்குப்பம் என்னும் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு, சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் வெள்ளநீா் செல்வதால், திடீா்குப்பம் பகுதியில் உள்ள குடிநீா் ஆழ்துளை கிணற்றில் இருந்து தன்னிச்சையாகவே தண்ணீா் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிா்வாகம் குழாயிலிருந்து தண்ணீா் வெளியேறாத வண்ணம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டனா். ஆனாலும், குடியிருப்புப் பகுதி மணற்பாங்கான பகுதி என்பதால் எங்கு பாா்த்தாலும் தண்ணீா் ஊற்றெடுத்து குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் மழைக்காலங்களில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறக்கப்படும் நாள்களிலும் இப்பகுதியில் தண்ணீா் ஊற்றெடுத்துக் குடியிருப்புகளைச் சூழ்வது வழக்கமான நிகழ்வாகும். இதேபோல், சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, திருவெங்கனூா் ஆகிய கிராமங்களில் கொள்ளிட கரையோரங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.