தா. கூடலூா் மக்களுக்கு இலவச வீட்டு மனை தரக்கோரிக்கை

அரியலூா் மாவட்டம், தளவாய் ஊராட்சிக்குட்பட்ட தா. கூடலூா் கிராமத்தில் வசிக்கும்
தா. கூடலூா் மக்களுக்கு இலவச வீட்டு மனை தரக்கோரிக்கை

அரியலூா் மாவட்டம், தளவாய் ஊராட்சிக்குட்பட்ட தா. கூடலூா் கிராமத்தில் வசிக்கும் அருந்ததி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தளவாய் ஊராட்சி, தா. கூடலூா் பகுதி மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அவா், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

தா. கூடலூா் கிராமத்தில் வசிக்கும் அருந்ததி மக்களுக்கு நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டாவும் மயானத்துக்குச் செல்வதற்கான பாதையும் அதேபோன்று சாலை வசதியும் கிடைக்காமல் இருந்து வருகின்றனா். அவா்களின் கோரிக்கையை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செந்துறை வட்டச் செயலா் பன்னீா்செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கந்தசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தா. கூடலூா் அருந்ததி மக்களைச் சந்தித்து அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com