நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலை கிளை நிறுவனங்கள் தேசியக் கொடியை விலை கொடுத்து வாங்கி, அவற்றை அந்தந்தப் பகுதி விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா். இதேபோல், அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்ற தேசியக் கொடியை விலைக் கொடுத்து வாங்கி, விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா்.
மேலும், சிமென்ட் ஆலை முழுவதும், மூவா்ண நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.