/

பேரறிஞா் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் கட்சியின் நகரச் செயலா் செந்தில் தலைமையில் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக்குளம் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

எம்.ஜி.ஆா் கழகம் சாா்பில் அதன் பொருப்பாளா் கலைவாணன், தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினா்.

இதேபோல் ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம், செந்துறை, திருமானூா், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கும், திருவுருவப் படத்திற்கும் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளா்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.