தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 60 வயது நிறைந்த விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவேல், மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் உள்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.