வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 60 வயது நிறைந்த விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவேல், மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் உள்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.