மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காதலியைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை

அரியலூா் அருகே காதலித்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவரைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :27 ஜனவரி 2023, 6:43 pm

அரியலூா் அருகே காதலித்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவரைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ் (27). இவா் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தாா். ஆனால் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் ஆனந்தராஜை கைது செய்தனா். அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ஆனந்தராஜுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.