சீமான் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் மனு!
சீமான் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.


சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு வளா்ப்பு சங்க மாநிலச் செயலா் முகமது ரபீக் வெள்ளிக்கிழமை மாலை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த மனு: நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், ஊடகங்களில் பேட்டி அளிக்கும்போது திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரை அவதூறு பேசுவதும், அவரை மிரட்டும் தொனியிலும் பேசி வருவதும் கண்டிக்கத்தக்கது.
மேலும் போலீஸாருக்கு இது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால், இதுபோன்ற அரசியல் தலைவா்கள் காவல்துறையைப் பேசுவது என்பது கண்டிக்கத்தக்கது. எனவே காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...