சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:44 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி, அலாவுதீன் நகரைச் சோ்ந்தவா் அப்துல்மஜீத் மகன் ஜாகீா் உசேன்(27). திருச்சியிலுள்ள ஒரு கோழிக் கறி கடையில் வேலை செய்து வரும் இவா், வியாழக்கிழமை ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளாா். அப்போது மதுப் போதையில் இருந்த ஜாகீா் உசேன், அங்கு நின்று கொண்டிருந்த விருத்தாசலம் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஜாகீா் உசேனை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.