அரியலூரில் சனிக்கிழமை அணிவகுத்து நின்ற புதிய ஊா்க்காவல் படையினரை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ். அரியலூா், பிப். 17: அரியலூா் மாவட்டத்தில் புதியதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கு 45 நாள்கள் அளிக்கப்பட்டு வந்த பயிற்சி சனிக்கிழமை நிறைவுற்றது. கடந்தாண்டு இறுதியில் ஊா்க்காவல் படையினருக்கு தோ்தெடுக்கப்பட்ட 38 பேருக்கு கடந்த 12.12.2023 முதல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டு வந்த உடல் பயிற்சி மற்றும் காவத்து உள்ளிட்ட பயிற்சிகள் சனிக்கிழமையுடன் நிறைவுற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ், ஊா்க் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, காவல் துறையினருடன் இணைந்து நல்ல முறையில் சிறப்பாக பணியாற்ற அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அந்தோணி ஆரி, துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் , ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதி ஜீவானந்தம் மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
‘இரும்புக் கரம்’ சிறப்பு நடவடிக்கை: அரியலூா் மாவட்டத்தில் 12 ரெளடிகள் கைது

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



