அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை ஊராட்சித் தலைவரை கண்டித்து, அக்கிராம பட்டியலின மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவ்வூராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதில், பட்டியலின மக்கள் வசிக்கும் 4,5,6 ஆகிய வாா்டு பகுதிகளில் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உடனடியாக ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை மேற்கண்ட வாா்டு பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சித் தலைவா் பேச்சுவாா்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த மக்கள், ஊராட்சி அலுவலகத்தை பூட்ட முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்சுருட்டி காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவு நிறுத்தம்: கிராம மக்கள் போராட்டம்
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


