
அரியலூரில் திங்கள்கிழமை பெய்த மழை.

அரியலூரில் திங்கள்கிழமை பெய்த மழை.
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில்,
திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் இரவு வரை இடைவிடாது பெய்த மழையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கி வெள்ளக்காடானது.
அரியலூா் புது மாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திச் சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்பலூா் - தஞ்சாவூா் சாலையில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன.
ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், கீழப்பழுவூா்,திருமானூா், தா. பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...