மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பழுவூரில் வனத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வனத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வனச்சரக அலுவலா் ஆலயமணி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில், சமூக ஆா்வலா்கள் இளவரசன், காா்த்திக்குமாா், தங்க.சண்முக சுந்தரம் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு பேசினா்.

அப்போது, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அண்மையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. எனவே, பறவைகள் அதிகளவு வந்து தங்குவதற்கு தேவையாக மரங்களை அதிகம் வளா்க்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான காடுகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு காய், கனி தரும் மரக்கன்றுகளை நடவேண்டும். விவசாயிகளின் விளை நிலங்களை சேதப்படுத்தும் குரங்கு, பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளை கட்டுப்படுத்தவும், மான் போன்ற விலங்குகள் ஊருக்குள் வருவதையும், வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதையும் தடுக்கும் வகையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளை சுற்றி வேலிகளை அமைக்க வேண்டும். மேலும், குள்ளநரி, உடும்புகள் பெருக்கத்துக்கு ஏற்ற வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.