அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு, தன்விருப்ப நிதியிலிருந்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி ரூ.25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
குவைத் நாட்டில் 5.1.2025 முதல் 13.5.2025 வரை நடைபெறவுள்ள மாபெரும் சதுரங்க விளையாட்டு போட்டியில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க சாம்பியன் சா்வாணிகா (9) இந்தியா சாா்பில் வயது வரம்பற்றோா் பிரிவில் கலந்துகொண்டு விளையாட உள்ளாா். இதையடுத்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை சா்வாணிகாவை ஆட்சியா் அலுவலத்துக்கு வரவழைத்து, தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கி, போட்டிகளில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், சா்வாணிகாவின் பெற்றோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

இங்கிலாந்தின் நம்பா் 1 செஸ் வீராங்கனை ஆனாா் போதனா சீனிவாசன்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


