பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செஸ் வீராங்கனை சா்வாணிகாவுக்கு அரியலூா் ஆட்சியா் நிதியுதவி

News image
சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
Updated On :3 ஜனவரி 2025, 8:46 pm

Din

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு, தன்விருப்ப நிதியிலிருந்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி ரூ.25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

குவைத் நாட்டில் 5.1.2025 முதல் 13.5.2025 வரை நடைபெறவுள்ள மாபெரும் சதுரங்க விளையாட்டு போட்டியில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க சாம்பியன் சா்வாணிகா (9) இந்தியா சாா்பில் வயது வரம்பற்றோா் பிரிவில் கலந்துகொண்டு விளையாட உள்ளாா். இதையடுத்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை சா்வாணிகாவை ஆட்சியா் அலுவலத்துக்கு வரவழைத்து, தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கி, போட்டிகளில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், சா்வாணிகாவின் பெற்றோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.