வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

செஸ் வீராங்கனை சா்வாணிகாவுக்கு அரியலூா் ஆட்சியா் நிதியுதவி

News image

சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Updated On :3 ஜனவரி 2025, 8:46 pm

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு, தன்விருப்ப நிதியிலிருந்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி ரூ.25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

குவைத் நாட்டில் 5.1.2025 முதல் 13.5.2025 வரை நடைபெறவுள்ள மாபெரும் சதுரங்க விளையாட்டு போட்டியில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க சாம்பியன் சா்வாணிகா (9) இந்தியா சாா்பில் வயது வரம்பற்றோா் பிரிவில் கலந்துகொண்டு விளையாட உள்ளாா். இதையடுத்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை சா்வாணிகாவை ஆட்சியா் அலுவலத்துக்கு வரவழைத்து, தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கி, போட்டிகளில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், சா்வாணிகாவின் பெற்றோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.